Pages

Sunday 3 February 2013

Important Media Principles


Some information about Communication and Media Study.

  • Presently According to School Curriculum There is Media and Communication study for Grade 10 and 11 Students and after that for A/L too.
  • According to this accommodation In Sinhala Medium More than 450 schools teach this subject and only in 40 Tamil Medium Schools. But Why not teach in Tamil Medium? because there are no teachers for this subject.
  • If any one try to learn Journalism  as professional subject following Institutions are offering the opportunity for that.
  • Collage of Journalism which offer one year full time Diploma Course in three Calgary. 1.Radio Course 2. TV Course 3. Print 
  • Last 7 years this course was Dip in Journalism one year full time and from last year added Advertising also. Bot form this year Collage expect no separate course for this three category but all three together in one year Dip course.
  • Basic qualification for this course is A/L 3 passes with current knowledge and course commence in three languages.
  • Course fee is 140.000 (One Lack and Forty Thousand) You may ask why this much fee? yes but collage has to spent more than 600.000/student for several ways such as equipment, Filed Trip, AC lecture room facility and Practical Training. But in this amount charging only 25% of that expense. And Three in installment can pay. For this course including 2 1/2 month Internship training also in recognize media Houses
  • If any one like to join can apply and see www.slcj.lkwww.pccsl.lk. Selection after Written test, Interview and only 90 students in three languages (Tamil, Sinhala and english)
Except Collage of Journalism There are in some other places also offering Media courses
  1. University of Colombo (Dip in Journalism only 3 an hours in a week on Sut day) No practical Training. Good for basic Knowledge.
  2. Media  Resource and Training Center (MRTC - Jaffna also one year Dip Course)
  3. Degree Course in the University of Kelaniya, University of Sri Jeyawardenapura, University of Jaffna and short time course in the Open University of Sri Lanka.  
Media Motivation among the Muslim Community

There are  more than10.000 Journalist and Media professionals in Sri Lanka.  Among them about 900 are Muslim Journalist (Including Freelance Journalista and writers) from all over the Country. But most of them Need proper training in this field to shine as excellent Journalist. Only few of them are fluent in Two or Three Languages. Therefore they need at least two language skill. But if they are capable in Sinhalese language too its more useful.  

Basic Training Needed Fields are below
  • News Gathering and writing (Reporting)
  • Developing Writing skill to Write features in various field
  • Language Skill (Tamil Speaking Muslim Journalist need Sinhala and English knowledge)
  • Investigative Reporting
  • Interview Techniques
  • Editing
  • Photo Journalism
  • Knowledge about New Media (Inter Net, Email, FB, Twitter  U tube and Blog)
  • Knowledge to use Equipment 
  • Audio Video Editing 
These are the Basic facts about the Media and to improve or develop skills in this field. (From Muslim Watch)

Home

Friday 6 May 2011

Hizb ut-Tahrir banned now on “alternative media” as well as print and electronic media

Freedom of Expression exposed as a lie yet again: America orders global closure of active Facebook accounts of Hizb ut-Tahrir and of its members

Upon American direction, Facebook has suspended the accounts of various branches of Hizb ut-Tahrir, of its media offices and of its members, including the pages of the Spokesman of Hizb ut-Tahrir in Pakistan, Naveed Butt, the Director of the Central Media Office, Hizb ut-Tahrir Tunisia, Hizb ut-Tahrir Palestine and various members in various countries. It is noteworthy that this is now the third time the account of Naveed Butt has been blocked, not to mention the previous blockings of various groups organized by the Hizb ut-Tahrir Media Office in Pakistan that called for the removal of American military, intelligence and private military organization from Pakistani soil. So, on the one hand, under the banner of Freedom of Expression, America sanctioned Facebook pages to celebrate days for make insulting cartoons of RasulAllah SAW or burning the Noble Quran, as well as many other lowly and filthy pages. Whilst on the other hand, America has ensured the blocking of pages of Hizb ut-Tahrir that expose her false ideology and its concepts such as democracy, freedom and other sick standards, and present to the Ummah details of the Islamic Khilafah state and its systems. As such the Western idol of Freedom of Expression has again been exposed.

Moreover, the West has shown that it has lost the battle for winning the pure and sincere hearts and minds with its crooked ideology. Having lost the battle, the West has resorted to its actual values of censorship, banning, force, terrorism and murder. These are the same values that we have witnessed on the internet regarding Fort Jangi, Fallujah and Guantanamo Bay, which should be enough to open the eyes of those who blindly support Freedom of Expression. It is madness to expect any good for humanity from a West that can not even tolerate less than a foot of cloth upon the faces of the Muslim woman who chooses to wear Niqab. It is this madness which has consumed Pakistan’s intellectually bankrupt traitor rulers who only last month raided an exhibition by Hizb ut-Tahrir in Islamabad Press Club, which detailed the systems of the coming Khilafah state, to seize seized books, leaflets, charts and flexes. And only three days after that they attacked the participants of the peaceful rallies organized by Hizb ut-Tahrir as if they were troops of the American enemy and continue to hold some of them in prisons until today. America and her collaborators should know that these self-exposing and childish antics will not force the Ummah to relinquish her Islam, rather they only hasten the impending burial of the West’s decayed ideology.(Ends/

Friday 17 December 2010

The Noble Task of a Writer - M. R. Mohamed of Sri Lanka


Synopsis of the keynote address delivered by M. R. Mohamed of University of Colombo, on 30.05.98 at the Arafa National College in Weligama on the occasion of the prize-giving ceremony for winners in the Essay Competition

A writer is a creator of poems, essays, short stories and plays, giving new form to his feelings and thoughts. His community, the times of his life, the problems he faced and the experiences he gained are reflected in his ideas. He always becomes ineligible to express his ideas in an existence beyond his community. There are limits to his wide thoughts and experiences. Research and reading extend these limits.

Compositions, essays and creative writings should not merely treat events sequentially, but convey new substance or a new message to the community. These will enhance the knowledge and abilities of a particular community, and preserve them from the ravages of time. It would be beneficial if these new creative writings become instrumental in the rehabilitation of decaying and devastated communities.

Likewise, every intellectual and literary master would be attracted in some manner by social, religious, political and economic conceptions. It would be difficult for any creative writer to preserve the uniqueness of his creation without traversing philosophies, principles and doctrines.

However, he cannot help but express them.  For example, the poems of the great poet Allama Iqbal inspire Islamic, social and spiritual consciousness and exude divine essence.

On the one hand, a section quoting the Al-Qur’an and hadith, in order that Islamic principles reach the community, may be observed. On the other hand, another section may be seen to convey Islamic thoughts to the community simply and subtly through literary productions such as short stories, plays and artwork. In today’s changing world, and in an environment where many ethnic communities live together, the second category is regarded as stronger. But if they lack an Islamic outlook and vision, their productions may be seem to become controversial and valueless.

There are two basic forces that guide man. The first is ‘feelings’ and the other is ‘thought’. Man largely lives in slavery to emotions. Only a few among them are attracted by ideas based on thought, control emotions and succeed in life. It is worrisome that even those who hold high positions are enslaved by emotions and neglect humanity, magnanimity, humility and patience. They become influenced by racial, religious and regional differences, enmity and intolerance, and live as uncivilized men. Those with knowledge and ability must help the others to lead a good life. Literary masters like the great poet Allama Iqbal, who composed poems in accordance with this precept, must arise.

In his words:

Relishing art is estimable
But worthless is the creation devoid of truth

Valueless is the verse of the poet, or the melody of the musician,
Or the breeze that impairs a garden

The object of art is attaining the brilliance of eternal life


Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

Wednesday 21 July 2010

'முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம்: சாத்தியப்பாடுகளும் சவால்களும்'

இலங்கை முஸ்லிம் ஊடகம் குறித்த ஒரு நீண்ட ஆய்வுக்கான முற்குறிப்பு

அறிமுகம்

கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு தேசிய ஊடகமில்லாத நிலைமை குறித்து அவ்வப்போது கரிசனை காட்டிவருவதுடன் மாத்திரம் நின்றுவிடும் நிலைமையை நம்மால் அவதானிக்க முடிகின்றது. நமது நாட்டிலுள்ள தேசிய ஊடகங்கள் முஸ்லிம்களைப் பற்றித் தவறாகஃதவறான கருத்துக்களை முன்வைக்கும் தருணத்தில் அல்லது 'நம் தரப்பு' செய்திகளைப் பிரசுரிக்க மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் இக்கதையாடல் நம்மிடையே சூடுபிடிக்கின்ற நிலைமையை நாம் அவதானிக்கலாம். நமது தற்போதைய ஊடகங்களின் பங்களிப்பை மிகத் துல்லியமாக வரையறுப்பதனை நமக்கான ஒரு தேசிய ஊடகத்தினை வரையறுப்பதற்கான முதலாவது மைல்கல்லாகக் கருதலாம்.

ஆய்வுக்கான பின்னணி

எந்த ஒரு சமூகத்தினதும் அல்லது நிறுவனத்தினதும் வளர்ச்சிக்கு அதன் கடந்தகால அடைவுகள் பற்றிய கணிப்பீடுகள் மிக முக்கியமானவையாகும். இது நமது ஊடகங்களுக்கும் பொருந்தும். ஊடகங்கள் முன்வைக்கின்ற செய்திகள் குறித்து எதிர்வினைகள் முன்வைக்கப்டும் ஒழுங்குஃமரபு நமது நாட்டிற்குப் புதியது. அதுவும் முஸ்லிம் ஊடகங்களைப் பொறுத்தரையில் அவை பற்றிய மறுவாசிப்பு இல்லையென்றே குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இலங்கையில் வெளிவரும் சமகால முஸ்லிம் ஊடகங்கள் பற்றிய ஆய்வு முயற்சிகளை முன்னெடுக்க எத்தனிப்பவர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம். இதனைக் கருத்திற்கொண்டும் இந்த ஆய்வுமுயற்சி உச்ச பயன்பாட்டைத் தரவேண்டும் என்ற நோக்கிலும், ஒரு வெளியாளாக அன்றி, இச்சமூகங்களின் உள்ளிருந்து மேற்கொள்ளும் சுய-விமர்சன ஒழுங்கில் இவ் ஆய்வை முன்வைக்க உள்ளேன்.

நோக்கம்

இவ்வாய்வு பின்வரும் இரு பிரதான நோக்கங்களைக் (Objectives) கொண்டதாக அமையும்.

முதலாவது, கடந்த இரண்டு வருங்களுக்குள் நமது ஊடகங்கள் அதன் வெளியீடுகள் மூலம் முன்வைத்துள்ள விடயங்கள் குறித்து ஒரு பகுப்பாய்வை (structural analysis) மேற்கொள்ளல்.

இதனை இன்னும் சிறிது விரிவாகக் குறிப்பிடுவதாயின், அவ்வாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, 'அதன் இலக்கு வாசகர்கள் (target readers) யார்? எவ்வாறான துறைகளில் அவ்வூடகங்கள் தமது பங்களிப்பை நல்கியுள்ளன? அவ்வூடகங்கள் தமது இலக்கு வாசகர்களை நோக்கி எதனை முன்வைக்கின்றது?' முதலான அம்சங்களைத் துல்லியமாக வரையறுப்பது இந்த ஆய்வின் மிகப்பிரதான நோக்கமாகும்.

இரண்டாவது, இவ்வூடகங்கள் தமது வெளியீடுகள் மூலம் நமது சமூகத்திலும் நமது நாட்டிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் (impact), பங்களிப்பு (contribution) என்பனவற்றை வரையறுத்தல். இது பலராலும் பலவிதமாகக் கருத்துரைக்க தக்கதான வாத-விவாதங்களை வேண்டிநிற்கின்ற சிக்கல்வாய்ந்த ஒரு பகுதியாகும். எனினும,; கருத்தியல் ரீதியான வாதமொன்றை முன்வைக்கும் நோக்கில் இவ்வாய்வை நான் எழுத முனையவில்லை. அத்துடன், இங்கு நான் முன்வைக்கும் கருத்துக்கள் முடிந்த முடிவுகளுமன்று. இவ்வாய்வில் இயன்றவரையில் கட்டுரையாசிரியர்களது தனிப்பட்ட கருத்துக்களை விமர்சிப்பதைத் தவிர்க்க விரும்புகின்றேன் மாறாக, ஒரு சமூகத்தில் தாக்குதிறன்மிக்க சமூக முன்னேற்றத்திற்கு காத்திரமான முறையில் பங்களிப்புச் செய்யும் விதத்திலமைந்த ஊடகப்பொறிமுறை (media mechanism) ஒன்றினை முன்வைத்தலையே இதன் பிரதான நோக்காகக் கொண்டுள்ளேன்.

ஆய்வு முறைமை

இந்த ஆய்வினை நமது நாட்டிலிருந்து 2008, 2009 ஆண்டுகளில் வெளியான இதழ்களை அல்-ஹஸனாத், எங்கள் தேசம் ஆகிய இரு மாதாந்த சஞ்சிகைகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளேன். இவ் ஆய்வு பின்வரும் நான்கு படிமுறைகளைக் கொண்டதாக அமையும்.

படிமுறை 01. ஏற்கெனவே வெளிவந்துள்ள ஊடகங்களின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள், சர்வதேச ஊடகங்களில் ஊடகம் பற்றி வெளியாகிய, ஒளி- ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், பிரசித்தி பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடனான நேர்காணல்கள் என்பனவற்றை உள்வாங்கியதாக அமைதல் Literature Review).

படிமுறை 02. அல்-ஹஸனாத், எங்கள் தேசம் சஞ்சிகைகளில் 2008, 2009 ஆம் வருடங்களில் வெளிவந்துள்ள ஆக்கங்களைத் தலைப்பு வாரியாகத் தரம்பிரித்து அட்டவணைப்படுத்துதல்.

படிமுறை 03. இவ்விரு சஞ்சிகைகளினதும் coverage குறித்த ஒரு ஒப்பீட்டு நோக்கினை முன்வைத்தல்

படிமுறை 04. ஊடகமொன்று சமூக நலனிலும் அபிவிருத்தியிலும் எவ்வாறு காத்திரமான விதத்தில் நேரடியாகப் பங்களிப்புச் செய்யலாம் என்பது தொடர்பில் எனது ஆலோசனைகளை முன்மொழிதல்

ஆய்வுக் கட்டமைப்பு

இந்த ஆய்வுக் கட்டுரை மூன்று பகுதிகளாக அமையும்.

முதலாவது பகுதி உலக விவகாரங்களில் ஊடகத்தின் செல்வாக்கு எத்தகையது என்பது குறித்த ஒரு பொதுவாசிப்பாக அமையும்.

இரண்டாவது பகுதி அல் ஹஸனாத், உண்மை உதயம் ஆகிய இரு சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆக்கங்கள் பற்றிய ஒப்பீட்டு நோக்கினை முன்வைக்கும்.

மூன்றாவது பகுதி ஊடகமொன்று எவ்வாறு ஒரு சமூகத்தின் அபிவிருத்திற்குப் பங்களிப்புச் செய்யலாம் என்பது குறித்த ஆலோசனைகளை முன்வைக்கும்.  By SL Muslim Forum

There are some important Questions;

01. What's the purpose of the study?

02. Who is going to head it?

03. Who is doing the actual field work?

04. How long will it take?

05. What outcome is expected?  
 
முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலாக எனது கருத்தை இங்கு முன்வைத்தல் பொறுத்தமென நினைக்கின்றேன்.

01. What’s the purpose of the study?

இந்த ஆய்வு பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்

• குறித்த ஊடகத்தின் கடந்த கால வெளியீடுகள் மூலம் அவை இதுவரைகாலம் கதையாடலுக்கு உட்படுத்தியுள்ள விடயங்கள், அதன் மூலம் இவை சமூக தளத்தில் எத்தகைய தாக்கத்தை இவ் ஊடகங்கள் செலுத்தி வந்துள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தல்,

• இவ் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களின் சாதக பாதகங்கள், அவை முன்வைக்கின்ற கருத்துப் போக்கு, அவை யாரை இலக்கு வாசகர்களாகக் கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கின்றன என்பது பற்றியும் பகுப்பாய்வு செய்தல், மற்றும்

• எதிர்காலத்தில் இவ் ஊடகங்களில் இருந்து நாம் எதனை எதிர்பார்க்கலாம், அதன் பலம், பலவீனம், மற்றும் இவ் ஊடகங்கள் எதிர்கொள்கின்ற சலால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பன போன்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தல்

02. Who is going to head it? Who is doing the actual field work?

இத்தகைய ஒரு ஆய்வுக்கு யாரைத் தலைமை தாங்க வைப்பது என்பது குறித்து தீர்மாணிப்பதற்கு பின்வரும் விடயங்கள் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.

இந்த ஆய்வு பன்முகப்பட்ட முகாந்திரங்களைக் கொண்ட ஒன்றாகும். அதாவது நமது ஊடகங்களின் பங்களிப்பு என்று வரும் போது பலதரப்பட்ட தலைப்புக்களில் அதனை ஆய்வுக்கு உற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இதனை மிகச் சுறுக்கமாகக் குறிப்பிடுவதாயின் தேசிய விவகாரங்கள், இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்கள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இவ்வூடகங்களின் உழஎநசயபந பற்றி ஆய்வுக்கு உட்படுத்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வுகளை இம்முயற்சிகளை பல கோணங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

03. What outcome is expected?

இங்கு நாம் ஆய்வு முயற்சியினை ஒரு திட்டமிட்ட முறைமையில் மேற்கொள்வதன் மூலம் முறையே குறுங்கால, இடைக்கால அடைவுகளாகப் பின்வரும் விடயங்களை வரையறுக்கலாம்.

01. நமது சமூகத்தில் பொதுவாக ஊடக ஊடகம் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை எவ்வாறு முன்வைக்கலாம் என்பதற்கான ஒரு மாதிரியாக இவ்வாய்வுகள் அமைதல் வேண்டும். அந்த வகையில் இது ஆய்வு முறைமைகளைப் பேணியதாகவும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களாகவும் அமைதல் மிக அவசியமாகும்.

02. இதன் விளைவாக இடைக்காலத்தில் நமது ஊடகத்துறை தொடர்பான பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் சமூகத்தினதும் இந்த நாட்டினதும் முன்னேற்றப்பாதையில் பங்களிப்புச் செய்யும் முன்னோடி ஊடகங்களாக மாறுவதற்கான இலக்கு, நோக்கு குறித்து கதையாடலை சமூகத்தில் வளர்த்தல். By SL Muslim Forum
 
Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Friday 26 March 2010

அரை நூற்றாண்டு கால இஸ்லாமிய சிந்தனை விருத்தியில் அச்சு ஊடகங்களின் பங்களிப்பு

இஸ்லாம் என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையாகும். அது எமது நாட்டில் அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஆன்மீக வெற்றிக்கு மட்டுமே வழிகாட்டுவதாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. ஐம்பதுகளுக்கு முந்திய இலங்கை முஸ்லிம்களின் அறிவும், சிந்தனையும், செயற்பாடுகளும், கலாசாரமும் அந்த வைகயிலேயே வழங்கப்பட்டிருந்தன.

மத்ரஸாக்களுக்கூடாகவும், அறபுத் தமிழ் நூல்களுக்கூடாகவும் போதிக்கப்பட்ட தஸவ்வுப்-பிக்{ஹத்துறை சார்ந்த அறிவே, இஸ்லாமிய அறிவு என கொள்ளப்பட்ட எண்ணக்கரு ஐம்பதுக்குப் பின்னர் செல்வாக்கிழக்க ஆரம்பித்தது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறபு நாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடனேயே கலாசாரத் தொடர்புகளை வைத்திருந்தனர்.

அவ்வேளை தென்னிந்தியாவில் பக்தி மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருந்தமையினால் இந்திய மயப்பட்ட இஸ்லாமிய கலாசாரமே இலங்கை முஸ்லிம்களுக்குக் கற்பிக்கப்பட்டது. ஆன்மீக செயற்பாட்டுக்கு வழிகாட்டும் ஒரு நெறியாக மட்டுமே இஸ்லாம் கருதப்பட்டு வந்தது. அதற்கப்பால் பேசுவது கூட பாவம் என்ற மனப்போக்கு வளர்த்துவிடப்பட்டிருந்தது. இந்நிலை ஐம்பதுகளில் படிப்படியாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இம்மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் அச்சு ஊடகங்கள் நிறைய பங்களிப்புச் செய்தன.

இக்காலகட்டத்தில் தமிழ் மொழி மூலமான கல்வி வளர்ச்சி அடைந்தமையாலும், முஸ்லிம் பாடசாலைகள் பெருகியமையினாலும், அதுவரை அறபுத் தமிழ் மூலம் கற்றுக் கொண்ட இஸ்லாம், தமிழ் மொழிமூலம் கற்றுக்கொள்ளும் நிலைக்கு மாற்றமடைந்தது. 'அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' என்று உரிமை கொண்டாட வேண்டுமென்று பிரசாரம் செய்யுமளவு அச்சு ஊடகங்களின் வளர்ச்சியால் அறபுத் தமிழ் சோபை இழந்தது. சுய மொழியில் உயர் கல்வி பெறும் வாய்ப்புக்கள் திறந்துவிடப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தில் தமிழ் மொழி மரபு மக்கள் மயப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் அறிமுகமான தப்லீக் ஜமாஅத் அதன் ஆரம்பகட்டத்தில் தஸவ்வுப் பின்புலத்தில் அமைந்ததால் இஸ்லாமிய சிந்தனையின் விரிவாக்கம் தொடர்ந்தும் தடைப்பட்டே இருந்தது. எனினும், அவ்வியக்கத்துக்கெதிராக ஆலிம்களில் ஒரு தொகுதியினர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

விவாத அரங்குகளும் கண்டனப் பிரசுரங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. (உம்: 1965 மாத்தறை மாநாடு) இஸ்லாம் ஆன்மீகம் மட்டுமல்ல உலகியலும் இணைந்தது என்ற கருத்தை முன்வைத்த ஜமாஅத்தே இஸ்லாமி சமகாலத்தில் இலங்கையில் அறிமுகமானாலும் இலங்கை முஸ்லிம்களின் செல்வாக்கை உடனடியாகப் பெற்றுக் கொள்ளவில்லை. அதுவும்கூட இந்தியாவிலும் இலங்கையிலும் ஆலிம்களால் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது.

இக்காலக் கட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் வியாபாரத் துறையில் செழிப்புற்றிருந்ததாலும், அரசியல்-வணிகத் தொடர்பு தென்னிந்தியாவுடன் பிணைந்திருந்தமையினாலும் ஏற்கனவே இருந்த சிந்தனை தொடர்ந்தும் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவந்தது. தலைநகரில் அச்சக வசதி பெருகியிருந்தமையால் பத்திரிகைகளும், நூல்களும் விளம்பரங்களைப் பெற்று பிரசுரமாகும் வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. சித்திலெப்பையின் காலம் முதல் புற்றீசல்கள் போல தோன்றி மறையும் கண்டனப் பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் கண்டு பழகிய சமூகம், அகில இலங்கை ரீதியாக எழுத, வாசிக்கத் தெரிந்த சமூகமாக வளர்ந்த போது அச்சு ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அறபுத் தமிழ் நூல்கள் பெற்ற இடத்தை தமிழ் நூல்கள் பிடித்துக் கொண்டன.

முதலில் தமிழ் நாட்டிலிருந்து நூல்கள் வருவிக்கப்பட்டன. பின்னர் இலங்கையிலேயே உருவாக்கப்பட்டன. முஸ்லிம் வாசகர் தொகை அதிகரித்த போது தேசிய தமிழ் தினசரிகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலியன வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம்களுக்கென ஆலமுல் இஸ்லாம், இஸ்லாமிய சுடர், முஸ்லிம் சுடர், இஸ்லாமிய பூங்கா எனும் பெயர்களில் தனிப்பக்கங்களை ஒதுக்கி முஸ்லிம் வாசகர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தன. இவற்றில் பிறமொழிகளில் வெளியான உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியில் வெளிவந்தன.

கபூரிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராகவிருந்த உமர் ஹஸ்ரத் அவர்கள், இஸ்லாமிய சிந்தனையைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். சொற்பொழிவுகளுக்கூடாக இப்பணியை ஆரம்பித்த அவரை, அவரது மாணவர்கள் அச்சு ஊடகங்களில் பயன்படுத்தினர். பிணியும் மருந்தும், மறையும் இறையும் மனுக்குலத்துக்குத் தேவை. நாற்பய நன்னூல் என்பன அவரது முக்கிய நூல்களாகும். தொடர்ந்து முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் பிரசுரமாகின.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமுத்தீன் எனும் நூலில் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் அழகுத் தமிழில் மொழிமாற்றம் செய்து தனித்தனி நூல்களை எழுதினார். மின்ஹாஜுல் ஆபிதீன் (பக்தர்களின் பாதை) முன்கித் மினழ் ழலால் (பிழையிலிருந்து விடுதலை) முதலிய, இமாமவர்களின் நூல்களும் தமிழில் கிடைத்தன.

இதே காலகட்டத்தில்தான் இஸ்லாம் கற்பிப்பதற்கென இஸ்லாம் பாடநூல்கள் தோன்றின. முதலில் தனி நபர்களாலும் (உம்: சாந்தி மார்க்கம்: மௌலவி ஏ.எம்.எல்.எம். பளீல் ) தொடர்ந்து அரசாங்கத்தாலும் அவை வெளியிடப்பட்டன. மீலாத் விழா தொடர்பான மலர்களும் (உம்: மீலாத் மலர் எம்.எஸ். அப்துல் மஜீத்) சிற்றேடுகளும் (உம்: அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.) பிரசுரமாகின.

இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், இஸ்லாமிய கலாசாரம் என்ற பாடங்கள் உயர் வகுப்புக்களிலும், பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாடத்திட்டத்துடன் தொடர்பான நூல்கள் வெளியாகின. சஞ்சிகைகளிலும், பருவ வெளியீடுகளிலும் பாடத்துடன் தொடர்பாக கட்டுரைகள் வெளிவந்தன.

பட்டமளிப்பு விழா, ஆண்டுவிழா போன்ற விழாக்களிலும் நினைவு நாட்களிலும், கல்வி நிறுவனங்கள், இயக்கங்கள் முதலியன சஞ்சிகை வெளியிடும் மரபை ஏற்படுத்தின. (உம்: மிஷ்காதுல் பாரி, அல்ஜாமிஆ, ஜம்இய்யா, இன்கிலாப்) இவை இஸ்லாமிய சிந்தனையை உள்ளடக்கிய ஆக்கங்களை வழங்கின. இதனால் அதுவரை வழங்கிவந்த சிந்தனை மரபு மாற்றமுற ஆரம்பித்தது.

உமர் ஹஸ்ரத் அவர்களின் மாணவரான மௌலவி யூ.எம். தாஸீன் (நத்வி) வழிகாட்டி என்ற பருவ வெளியீட்டை இப்பணிக்காக ஆரம்பித்து வைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் வெளியீடான வழிகாட்டி இடையில் நிற்க, 1970 முதல் அல் ஹஸனாத் அப்பணியைத் தொடர்ந்தது. ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாசாரம், சட்டம், நீதி போன்ற எல்லாத் துறைகளிலும் அல்லாஹ் விரும்பும் நன்மைகளையும் அல்லாஹ் வெறுக்கும் தீமைகளையும் சுட்டிக்காட்டி நன்மைகளை வளர்ப்பதே தனது இலட்சியம் என்ற கருத்தோடு அல் ஹஸனாத் தனது பணியை ஆரம்பித்தது.

அது இந்திய - பாகிஸ்தான் மோதல் பற்றி (ஜூன் 1972) எழுதிய போது வெளிநாட்டு அரசியல் விவகாரம் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என ஒரு வாசகர் கண்டனம் தெரிவித்தார். 'முஸ்லிம்கள் குறுகிய தேசியவாதிகளல்லர் விரிந்த சர்வதேசவாதிகள் என்ற சிந்தனைகூட தெரியாத நிலையில்தான் சமூகம் இருந்தது.

தொடர்ந்து 1978 முதல் 'இஸ்லாமிய சிந்தனை' (நளீமிய்யா வெளியீட்டுப் பணிப்பகம்) அதன் பெயருக்கேற்ப புலைமசார்ந்தோர் மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை அறிவுபூர்வமாக வளர்த்து வருகின்றது. மேற்கத்திய சிந்தனை மூலம் தவறாக விளங்கப்பட்டுள்ள வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தி இஸ்லாமிய சிந்தனையை முன்வைக்கிறது.

உதாரணமாக ஆன்மீகம், உலகியல், மனஆரோக்கியம், உடற்சுத்தம், உலக வாழ்வு, உயிர்ப்பிராணிகள், தேசியவாதம், சூழலியல், பயங்கரவாதம், தொடர்பூடகம், கல்வியியல், அறிவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல், அழகியல், தொல்பொருளியல் முதலான துறைகளுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான உறவை அது ஆழமாக ஆராய்ந்திருக்கின்றது.

இவற்றோடு 1995 இல் மீள்பார்வை இப்பணியில் இணைந்து கொண்டது. அன்று பாகிஸ்தான் பற்றிப் பேசியபோது தவறுகண்ட சமூகம் இன்று இல்லை. மீள்பார்வை சர்வதேச முஸ்லிம் உலகு பற்றிய சிந்தனையை வளர்த்து வருகின்றது. அபூ நதாவினால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்த பத்தி, சமகால முஸ்லிம் உலகையும் இலங்கை முஸ்லிம் அறிஞர்களின் கருத்துக்கள், சிந்தனைகள் தமிழ்ப்படுத்தப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதன் சகோதர சஞ்சிகையான பயணம் ஆன்மீக விளக்கமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. காலப் போக்கில் மீள்பார்வை ஊடக மையம் என்ற பெயரில் அது தனது பணியை விரிவுபடுத்தியது. வைகறை, சர்வதேசப் பார்வை என்ற பெயர்களில் வேறு சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றது.

கூடவே, சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் அறபுநூல்கள், சொற்பொழிவுகள் பலவற்றையும் இந்நாட்டு முஸ்லிம் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் நூலுருவில் வெளியிட்டு வருகின்றது. இனப் பிரச்சினைகளை ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம், வாழ்க்கை ஒரு வணக்கம், இஸ்லாம் இலகு மார்க்கம், கருத்து வேறுபாடுகள், சமூக அரசியல் மாற்றம், இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.

தொடர்ந்து வந்த பத்திரிகைகளும் தமது ஆக்கங்களுக்கூடாக இஸ்லாமிய சிந்தனையை விரிவுபடுத்தி வந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில், புதுமைக்குரல் (1965-1970), ஷிக்வா (1977-1978) அஷ்ஷபாப் (1977-1985) நிதாஉல் இஸ்லாம், முஸ்லிம் நோக்கு முதலிய பத்திரிகைகளின் பங்களிப்புக்கள் முக்கியமானவை. சில ஏடுகளோடு நின்றுவிட்ட வாலிப முஸ்லிம் தளிர், அல் மதீனா, எமது பார்வை முதலிய ஏடுகளும் இப்பணிக்காக முயற்சித்துள்ளன. ஈமானிய புரட்சிக்குப் பின்னர், அல் இஸ்லாம், எழுச்சிக் குரல், நேசன், தூது என்பனவும் இத்துறையில் உழைத்தனவாயினும் சமூக அங்கீகாரத்தைப் பெற முடியாதவாறு ஒருபக்கம் சார்ந்து நின்றன.

இஸ்லாமிய சிந்தனையை வளர்ப்பதில் ஜமாஅத்தே இஸ்லாமியும், ஜாமிஆ நளீமிய்யாவும் அச்சு ஊடகத்துக்கூடாக அதிக பங்களிப்புக்களை வழங்கியுள்ளன. ஜமாஅத்தே இஸ்லாமி அதன் தாபகரான ஸெய்யித் அபுல் அஃலா மவ்தூதி அவர்களின் சொற்பொழிவுகளையும் நூல்களையும் தமிழ்ப்படுத்தி வழங்கியுள்ளது. தமிழ் நாட்டிலிருந்தும் அவரது நூல்களை வரவைத்துள்ளது.

தப்ஹீமுல் குர்ஆன் உட்பட சிறியதும் பெரியதுமான ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை இலங்கை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், இலக்கியச் சோலை முதலிய பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களையும், பிற அறிஞர்களால் வெளியிடப்பட்ட நூல்களையும் தனது புத்தக மையத்துக்கூடாக வழங்கி வருகின்றது.

உதாரணமாக மறை நிழலில் மனிதன் (ஹஸனுல் பன்னா), இறை நீதியும் மனித நீதியும் (அப்துல் காதிர் ஒளதா), ஐயமும் தெளிவும் (முஹம்மத் குதுப்), ஆன்மீக வெறுமை (அஸாம் அல் அதார்), அல்குர்ஆனின் நிழலில் (ஸெய்யித் குத்ப்) இஸ்லாமியக் கல்வி (யூஸுப் அல் கர்ளாவி), இஸ்லாமிய நாகரிகம் (முஸ்தபா ஸிபாயி) முதலிய நூல்கள் இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தும் விரிவுபடுத்தியும் உள்ளன.

எம்.எச்.எம். நாளிர், வளவாளர்-தேசிய கல்வி நிறுவகம்

நன்றி: மீள்பார்வை, இதழ்: 180, பக்கம்: 17 (21 ஓகஸ்ட் 2009- வெள்ளிக் கிழமை)

Wednesday 24 March 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை!ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா? பாகம் 5 (Part 05)

“சுடரொளி” வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன்.


இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.

மேலும் வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன .

இவரே பின்னர் புலி ஊடகமொன்றின் முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்பட்டதாக செய்திகள் கூறின. இப்போதும் அக்கொலைக்கான காரணகர்த்தாவாக குற்றம் சாட்டப்படும் அந்நபர் இன்னமும் புலி சார்பு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஊடகவியலாளனும் இன வெறியும் புலிவெறியும் கொண்டு கொலைகளுக்கு பின்புலமாக நின்றிருந்தால் அவனை ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா பொரூத்தமாகவிருக்கும்?.

முன்னாள் சுதந்திர ஊடகவியலாளராக தன்னை காட்டிக்கொண்ட இன்னுமொருவர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதியாக வாழ்வதாக சொல்லப்படுபவர் , முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான புலிகளின் முன்னாள் உறுப்பினர் , தீவிர முஸ்லிம் விரோத செய்தியாளர் எனக் கூறப்படும் ஜெயானந்த மூர்த்தி. இவர் இலங்கையில் செய்தியாளராக இருந்த காலத்தில் (07.01.2003) இவரது வீட்டின் மீது கைக்குண்டொன்று இவர் வீட்டில் இல்லாத சமயம் வீசப்பட்டு , இவரது வீடு சிறு சேதத்திட்குள்ளானபோது தனது வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றுக்கு எவ்வித ஆதாரமுமற்று இவருக்கு சார்பாக “கிழக்கு செய்தியாளர் சங்கமும்” அக்குண்டு தாக்குதல்களுக்கு காரணம் ” முஸ்லிம் சமூக மேம்பாட்டு முன்னணி” என்று தமிழ் தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டு , வெளியிடச்செய்து தமது முஸ்லிம் விரோதப்போக்கை வெளிப்படுத்தியவர்.

இவர்கள் எல்லாம்தான் அன்று தமிழர் தேசியக்கூட்டமைப்பை ஆட்கொண்டிருந்தவர்கள் . இன்று வரை கடல் கடந்து அகதியாகி இலங்கையில் தமிழ் தேசம் நிர்மாணிக்க கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்.

புலிகளின் தமிழ் தேசிய தொலைக்காட்சியான தமிழீழ தேசிய தொலைக்காட்சி இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன் சின்னமாக தேசிய மலராக புலிகள் தேர்ந்தெடுத்த கார்த்திகை மலர் தொலைக்காட்சியில் சகல நிகழ்ச்சிகளிலும் திரையில் தோன்றுமாறு காண்பிக்கப்பட்டது. சமாதான காலத்தில் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் ஊடகவியலார்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு படையெடுத்தனர். அவ்வாறு ஒரு தடவை சமாதான காலத்தின் பொழுது , அதுவும் புலிகளின் தனியான தமிழீழ தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் தெற்கிலிருந்து நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு மூவினத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்கு சென்றபோது சில சிங்கள ஊடகவியலாளர்கள் , தமிழீழ தேசிய தொலைக்காட்சி நடத்தும் ஊடகவியலாளர்களிடம் ஆவல் மேலிடக் கேட்டார்கள் “மிகவும் நச்சுத்தன்மையுள்ள கார்த்திகை மலரை ஏன் தேசிய மலராக்கி கொண்டீர்கள்”

(தகவல் ; சத்தார் –நவமணி) என்று; அதற்கு அவர்கள் சொன்ன பதில் பூவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது , பூவின் மறுபக்கமுள்ள மருத்துவக்குனங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்ததாக கூறப்பட்டது.

உண்மையில் புலிகளின் ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களும் கார்த்திகை பூவைப்போலவே இருக்கிறார்கள் ,தன்னகத்தே மிகுந்த நஞ்சைக் கொண்டிருகிறார்கள் , தமது ஊடகப்பணி மூலம் தீவிர தமிழ் தேசிய நம்பிக்கைகளுக்காய் அவர்கள் செய்யும் நன்மையை விட அவர்கள் தமது தேசிய வெறியுடன் சிங்கள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் நச்சை உலகெங்கும் கக்கி வருகிறார்கள் அல்லது மறைத்துக்கொண்டு அவ்வப்போது தமது நச்ச்சுக்கருத்துக்களை கசியவிடுகிரார்கள்.

மானிப்பாய் மின்னல் ரங்கா (சக்தி தொலைகாட்சி) ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னை பற்றி மிகப் பெரிதாக நினைப்பவர் என்பதை அண்மையில் நான் இலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பிதற்றும் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. தான் இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம் இருப்பது போல் டக்லஸ் தேவானந்தா மற்றும் தொண்டமான் போன்றோர் தனக்கு பயப்படுவது போல் எதிர் கருத்துக்களை கூறி -அதன் விளைவாய் ஏற்படும் சாதக நேர்கருத்துக்களை முதலீடு செய்யும் விதமாக நாசூக்காக தனது “ஊடகவியல்” அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

இவர் அரசு- புலி சமாதான காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐரோப்பிய விஜயத்தின் போது , ஜனாதிபதியுடன் நெருங்க வாய்ப்பு கிடைத்ததென்றும். அதனைப் பயன்படுத்தி தான் ஒரு பெரிய வெகுமதியை பெரும் வகையில் செயற்பட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானபோது. ஜனாதிபதியின் சிபாரிசின்படி இவருக்கு நோர்வேயின் இலங்கை தூதுவராலயத்தில் முதன் நிலை செயலாளர் (ஊடகம்) ( First Secretary-Media ) வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும்.

அந்நியமனத்தி ற் கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவென்றும், ஆனால் ரங்கா உண்மையில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதால் , தான் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் , அவ்வாறு செல்வதற்கு தனக்கு எதிரணியில் கூட பெரும் செல்வாக்கிருக்கிறது என்பதை காட்ட அவர் மேற்கொண்ட உத்திதான் தனக்கு முதல்நிலை செயலாளர் (ஊடகம்) பதவிக்கான நியமனம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கிடைத்தும் தான் செல்லவில்லை; நீங்கள் எனக்கு என்ன தரப்போகிறீர்கள், என்ற பேரம் பேசும் நிலையில் தன்னை உயர்த்திக்காட்டி தனது எம்.பீ பதவிக்கான சூழ்நிலைகளை ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது .

அதேவேளை தன்னைபற்றி, தனது ஆளுமை பற்றி அதீத எண்ணம்கொண்ட ரங்கா , மாறாக தனக்கு நோர்வேயில் தூதுவர் பதவியில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டதாக எனது ராஜரீய தொடர்புகள் கூறின. சரி போகட்டும் இவரது கல்வியும் தகுதியும் என்ன என்பது ஒரு புறமிருக்க இவர் தன்னை பற்றி என்ன நினைத்துள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சி தேவை.

தொடரும்…

எஸ்.எம்.எம்.பஷீர் Ends/

ஊடகம் இனியும் பூடகமில்லை! தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் யார்?

Part 04: ஊடகம் இனியும் பூடகமில்லை! (பாகம் நான்கு)

இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள “தீபம்” தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார “தீபத்துக்கு” இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு ” முஸ்லிம்” என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார்?

ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளிஏற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் “கண்டித்தவர்”. ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் “இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல…இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்.” என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.

இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! )மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற “வாய்ப்பு” பெற்றவர்.

வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். ஆயினும் இவர் உண்மையில் ஒரு தமிழர் என்றும் பின்னர் இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்பதும் அறிந்ததே.

இவர் எப்போது ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்வியும் முக்கியத்துவமானது. ஏனெனில் இவர் ஒட்டிசுட்டானில் புளியங்குளத்தில் பிறந்தவர். அதேவேளை இவர் எண்பதுகளில் மாத்தளையில் வாழ்ந்தபோது சிறு கதைகளை “கனக ஸ்ரீஸ்கந்தராஜா” என்ற புனை பெயரில் எழுதியதாக அவரே தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் முருகக்கடவுளின் பெயரான கந்தன் எனும் பெயரையும் உள்ளடக்கியுள்ளது.உண்மையில் அப்போது அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவ்வாறான பெயரை தனது புனைபெயராக தேர்ந்தெடுக்க காராணமில்லை.

எனவே 1995 களில் அவர் முஸ்லிமாக இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. அனஸ் ஓட்டிசுட்டானை சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ஸ்ரீ பால முருகன் எனவும், ஒட்டிசுட்டானில் ராணுவம் சுற்றி வளைத்தபோது; ஆமியிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு முஸ்லிம்வீட்டுக்குள் ஸ்ரீபாலமுருகன் ஓடியதாகவும், இலங்கை இராணுவம் அவரை துரத்திசென்றபோது , அவ்வீட்டு பெண் குளித்துகொண்டிருந்த நிலையை பார்த்து, இராணுவம் திரும்பி சென்று விட்டதாகவும், அதன்பின் பால முருகன் காப்பாற்றப் பட்டதாகவும், அதனால், தன்னை காப்பாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், இன்று, அவர்களது குடும்பமும் இஸ்லாம்மதம் மாறிவிட்டதாகவும் அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இவர் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் என்ற பெயர், ஒருவேளை அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாத்திகராகவிருந்த பிரபல எழுத்தாளர் நீரோட்டம் , தென்றல் பத்திரிகை ஆசிரியர் அடியார் இஸ்லாம் மத்தத்தை தழுவி தனது பெயரை “அப்துல்லாஹ் அடியார்” என்று மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்குள் பிரபல்யமாக அறியப்பட்டார். எனவே ஒருவேளை அவரது இளையவர் என்ற பொருள்பட ( Junior Abdullah ) தனது புனை பெயரை தேர்ந்திருக்கலாம். ஆனால் இவரது முஸ்லிம் பெயர் எம்.என்.எம்.அனஸ். அனஸின் சிறுவயது ஆசை முன்னாள் காலஞ்சென்ற பிரபல தமிழ் ஒலிபரப்பாளர் கே. எஸ். ராஜா எனும் கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் போல் வருவதாகும்.

அந்த வகையில் தனது புனை புனை பெயராக அவரின் ( கே. எஸ். ராஜா ) பெயரையே தேர்ந்தேடுத்திருக்கலாம். அல்லது தனது உண்மையான பெயரான ஸ்ரீ பாலமுருகன் எனும் முருகனின் ( தமிழ் கடவுளின் ) பெயரை ஒத்த பெயரை ( முருகனின் ) இன்னுமொரு பெயருடன் வரிந்து கொண்டிருக்கலாம. எது எப்படி இருப்பினும் யார் இந்த அப்துல்லா என்பதை விட இவரது ஊடக புலிகளுடனான சல்லாபங்கள் எமது கேள்விக்கு உரியவை.இவர் புலிகளின் குரலாக , சிங்கள இனவாதத்தினை கக்குகின்ற ஊடகவியலாளராக தனது தொழில் மற்றும் இலண்டன் புலம் பெயர் வாழ்க்கைக்காக ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளராக செயட்பட்டாரா ?

இந்த இளைய அப்துல்லாஹ்வின் முஸ்லிம் சமூகத்துக்கான எழுத்துக்கள் குறித்து அவரின் நூலொன்றுக்கு முகவுரை எழுதியுள்ள மிகச்சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் , சமூக செயற்பாட்டாளர் நண்பர் ஓட்டமாவடி அரபாத் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக்கொண்டு கதைகள் எழுதுய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வழ்வவலங்களை இளைய அப்துல்லா போதியளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு. மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும் துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு நன்றி செய்யும் நன்றிக்கடன் . அக்கடன் இளைய அப்துல்லாவை பொறுத்தவரை ஒரு “நிலுவை”யாகவே நிற்கிறது.” இவ்விமர்சனமே விளக்கம் தேவையில்லாமால் அனஸை விளக்கி நிற்கிறது.

அதேல்லாம் விட இவரது “புலிஷ்துதி” எல்லை மீறி பாதிக்கப்பட்ட தமிழ் அப்பாவி மக்களைக்கூட கண்டுகொள்ளாத அளவு அவரது கண்களை மறைத்து இதயத்தை இறுக்கி விட்டது என்பதற்கு இன்னுமொரு சாட்சி புலிகளின் இறுத்திக்கால நிகழ்வுகளில் போது ஈழவன் எனும் ஒரு தீபம் நேயர் எழுதிய கருத்து.

” ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே ! (ஈழவன்)

அக்கருத்துக்கு இளைய அப்துல்லாஹ் எனப்படும் அனஸ் எனப்படும் ஊடகவியலாளர் என்ன எழுதினார் என்பதை நோட்டமிடுவோருக்கு தெளிவாகப்புரியும் இவர் முட்டாள்களின் கூடாரத்திலிருந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஒரு பேர்வழி என்பது. இதுவரை காலமும் புலிகளின் சார்பாக குரல் கொடுத்துவிட்டு இப்போது தான் முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் என்று ஏற்றுக்கொள்வது புலிகள் பயம் இனி இல்லை என்பதை காட்டுகிறதா அல்லது புலிகளுக்காக வேலை செய்வதை தவிர்க்கமுடியவில்லை என்ற பச்சாதாபமா!. ஊடகத்தில் கூலிக்காக நிறையப்பேர் மாரடிக்கிறார்கள்

” ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.”

சரி அதுபோகட்டும் என்றால் தீபம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பளராக பணியாற்றிய முன்னாள் புலிகளை விமர்சிக்கும் , நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருதடவை என்னிடம் புலித்தலைவன் பிரபாகரனின் ஆளுமை கட்டுக்கோப்பு பற்றி வியந்து கூறியபோது நான் அறிந்த அவரா இவர் ! என்று குழம்பி எனது கருத்தை என்றும்போல் உறுதியாக தர்க்கரீதியாக சொல்லவேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்று வந்தால் சில வேளைகளில் யார் எந்தப்பக்கம் என்று ஒன்றுமே புரியலே!

(குறிப்பு: நான் ஊடகவியலாளன் அல்ல மற்றும் எனது தொழிலும் அதுவல்ல, எனது எழுத்தும் ஊடக பங்குபற்றல்களும் ஊதியத்திற்காகவோ செய்யப்படுபவை அல்ல எனது கட்டுரைகளுக்கு தொலைபெசிமூலமும் மின்னஞ்ஞல் மூலமும் ஆதரவினை தெரிவித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள், மின்னல் ரங்காவினது இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உத்தியோக பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சி சிங்களத்தில் “புரவசி பெரமுன* (குடிசன முன்னணி ) என்ற பெயரில் ஜெயரத்தினம் ரங்காவை கட்சிச் செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. )

தொடரும் .. ..

எஸ்.எம்.எம்.பஷீர் Ends/



Saturday 20 March 2010

Biased media reports on the Israeli-Palestinian conflict

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic research!..The Administrator of UK

Part 01:



Part 02:



Part 03:



Ends/